search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியாத்தம் விபத்து"

    குடியாத்தம் ரெயில்வே மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி மோட்டார் சைக்கிளோடு 40 அடி பள்ளத்தில் விழுந்த 3 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    குடியாத்தம்:

    பள்ளிகொண்டா செல்லியம்மன் நகரை சேர்ந்த ஜெயசீலன் மகன் பிரதீப் (வயது 20), பள்ளிக்கூட தெருவை சேர்ந்த சரவணன் மகன் நவீன் (20), அய்யாவூ நகரை சேர்ந்த சேட்டு மகன் அபிநாஸ் (20) ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் நோக்கி சென்றனர்.

    குடியாத்தம் ரெயில்வே மேம்பாலத்தில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மேம்பால தடுப்புச்சுவரில் மோதியது.

    அப்போது நிலைதடுமாறி சுமார் 40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து மோட்டார்சைக்கிளுடன் 3 பேரும் கீழே விழுந்தனர்.

    அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலக்கண்ணன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்ப முயன்றனர்.

    அதற்குள் படுகாயம் அடைந்த வாலிபர்கள் 3 பேரும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பைக் மரத்தில் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி சாமியார் மலையை சேர்ந்தவர் சிவசெங்கோலன் (வயது 50). இவரது மகன் விஜய் (25). இவர்கள் 2 பேரும் கட்டிட தொழிலாளி.

    நேற்று மாலை வேலையை முடித்துவிட்டு 2 பேரும் சைனகுண்டாவில் இருந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பைக்கை விஜய் ஓட்டிவந்தார். சிவசெங்கோலன் பின்னால் அமர்ந்து வந்தார்.

    கொட்டமிட்டா ஆம்பூரான்பட்டி என்ற இடத்தில் பைக் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் சிவசெங்கோலன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். விஜய் படுகாயமடைந்தார்

    பொதுமக்கள் விஜய்யை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

    இது குறித்து தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தத்தில் கல்குவாரி வெடி விபத்தில் பலத்த காயமடைந்த தொழிலாளிக்கு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட காந்திநகர் கல்லேரி பகுதியில் கல் குவாரி உள்ளது. இதில், பெண்கள் உள்பட 75-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கூலிக்கு வேலை செய்து வருகின்றனர். பாறைகளை பிளக்க டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சி அடங்கிய வெடி மருந்துகளை நிரப்பி வெடி வைக்கிறார்கள்.

    வெடி சிதறும் பாறைகளை சிறு, சிறு கற்களாக உடைத்து ஜல்லி தொழிற்சாலைக்கு அனுப்புகின்றனர். இப்படி, அதே பகுதியை சேர்ந்த தசரதன் (வயது 27) என்கிற தொழிலாளி, கல் கம்பம் நடுவதற்காக பாறைகளை நீளமாக பிளக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

    பெரிய பாறைகளாக இருந்தால், அவற்றில் சிறு சிறு துளையிட்டு கொஞ்சம் வெடி மருந்துகளை நிரப்பி வெடி வைத்துபிளந்துள்ளார். இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்த தசரதன் தன் பக்கத்தில் வெடி மருந்துகளை வைத்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வெடி மருந்துகள் திடீரென வெடித்து சிதறியது.

    இதில் கூலித்தொழிலாளி தசரதனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற தொழிலாளர்கள் சற்று தொலைவில் இருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உயிருக்கு போராடிய தொழிலாளியை மீட்டு குடியாத்தத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். தசரதனின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    ×